Thursday, September 5, 2013

விகடன் திரை மதிப்பெண் - Vikatan Cine Ratings


திரை விமர்சனம் எழுதுவதிலும் அதற்கு மதிப்பெண் வழங்குவதிலும் ஆனந்த விகடன் பாணி அலாதியானது.

ஆனந்த விகடன் விமர்சனங்களே சில வேளைகளில் பதிவர்கள் இடையே விமர்சனதிற்கு உள்ளாகின்றன. பக்கசார்பு, உச்ச நட்சத்திரங்களுக்கு ஜால்ரா என்றெல்லாம் பலர் பலவாறு கூறினாலும் அவர்களின் தனித்துவம் அவர்களின் மதிப்பெண் முடிவுகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது.




அந்த வகையில் அவர்கள் சமீபத்தில் வந்த சில படங்களுக்கு வழங்கிய புள்ளிகளை இங்கே பட்டியலிடுகின்றேன். உங்கள் விருப்ப படங்களை மாற்றைய படங்களோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்,

* ஆதலால் காதல் செய்வீர் - 


* ஐந்து ஐந்து ஐந்து (555) - 


* தலைவா - 


* பட்டத்து யானை - 



* மரியான் - 

* சிங்கம் 2 - 

* தில்லுமுல்லு  - 


* தீயா வேலை செய்யணும் குமாரு - 

* குட்டிப்புலி  - 

* நேரம் - 

* சூது கவ்வும் - 


* எதிர் நீச்சல் - 


* மூன்று பேர் மூன்று காதல் - 


* உதயம் NH4 - 

* சேட்டை - 

* கேடி பில்லா கில்லாடி ரங்கா - 

* சென்னையில் ஒரு நாள் - 

* சுண்டாட்டம் - 


* பரதேசி - 


* ஹரிதாஸ் - 


* ஆதி-பகவான் - 

* விஸ்வரூபம் - 


* கடல் - 

* சமர் - 

* கண்ணா லட்டு திண்ண ஆசையா - 

* அலெக்ஸ் பாண்டியன் - 

* நீதானே என் பொன் வசந்தம் -  

* கும்கி - 

* நீர்ப்பறவை - 

* நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - 

* துப்பாக்கி - 

* போடா போடி - 

* ஆரோகணம் - 

* பிட்சா - 

* சுந்தர பாண்டியன் - 

* சாட்டை - 

*  மாற்றான் - 

* தாண்டவம் - 






Tuesday, September 3, 2013

ஆதலால் காதல் செய்வீர் - விகடன் விமர்சனம்

'ஆதலால் காதல் (மட்டும்) செய்வீர்’ படம்!
க்ளாஸ்மேட்  சந்தோஷ் ரமேஷ் (அறிமுகம்) - மனீஷாவுக்கு காதல். சின்னச் சின்ன சில்மிஷங்கள் 'ஓவர் தனிமை’ அளவுக்கு எல்லை மீற, கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றோருக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். ஆனால், விஷயம் தெரிந்துவிடுகிறது. காதலர்கள் ஒன்றுசேர நினைக்க,  'கருவைக் கலைக்க வேண்டும்’ என்பதை சந்தோஷின் பெற்றோர் நிபந்தனையாக வைக்கிறார்கள். 'குழந்தைதான் ஒரே ஆதாரம்’ என மனீஷா மறுக்க, வயிற்றுப் பிள்ளையை வைத்து நடத்தப்படும் நாடக சென்ட்டிமென்ட் டால் காதலும் கருவும் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!
நீண்டகாலத் தயாரிப்பாக இருந்தாலும், 'நாடகக் காதல்’ என்ற பதம் தமிழகத்தில் பரபரக்கும் சூழலில்  வெளியாகியிருப்பதால் 'டாபிக்கல் டச்’ சினிமாவாகிவிட்டது.  
'நான் ஹஸ்பண்ட்னு சொன்னா நம்ப மாட்டாங்க...’ என்று தன் காதலியின் கருவைக் கலைக்க நண்பனைக் கணவனாக நடிக்க வைக்குமிடம்... பெரியவர்களுக்கான பகீர். ஒரு கணம் உலுக்கியெடுக்கும் அந்த க்ளைமாக்ஸ் பாடல்... இளைஞர்களுக்கான திகீர். இந்த இரண்டும் ஓ.கே. ஆனால், மற்றபடி எந்தத் திருப்பமுமற்ற திரைக்கதை அலுப்பு!
நட்சத்திரப் பட்டாளம் இல்லாத மொத்தப் படத்தையும் ஒற்றைத் தூணாகத் தாங்கி நிற்பது மனீஷாவின் விழி, இதழ்களும் உடல் மொழிகளும் மட்டுமே! வீட்டில் காதலை மறைக்க மனீஷா செய்யும் சேட்டைகளும் குறும்புகளும்... ச்சோ ஸ்வீட்!  'உன்  பொண்ணு படுத்ததுக்கு எவ்ளோ காசு வேணுமோ, அதை வாங்கிட்டுப் போ’  என்று பஞ்சாயத்துக்களில் தெறித்து விழும் வார்த்தைகளின்போது, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் விம்மி அழும் காட்சியில் பதற வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். 'நீங்க மாமா ஆகிட்டீங்க’ என்று சந்தோஷை வாழ்த்தும்போது, 'நீங்க வேற... சீக்கிரமே அவன் அப்பாவே ஆகப் போறான்’ என்று கலாய்க்கும் இடங்களில் சிரிக்க வைக்கிறார் அர்ஜுன். இந்தக் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்ட அளவுக்கு, சந்தோஷின் பாத்திரத்தை வலுவாக்கவில்லையே டைரக்டர் சார். சைக்கிள் கேப்பில் பெல் அடிக்கும் ஸ்கோப்கூட இல்லாமல் திண்டாடுகிறார் சந்தோஷ்.  
'லவ்வர்ஸை அப்படியே விட்ரணும்... அவங்களா சண்டைபோட்டுப் பிரிஞ்சுடுவாங்க. நாம பிரிக்க நினைச்சாதான், அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிரும்’, 'உங்க பொண்ணு செத்துட்டானு நினைச்சு வந்து சேருங்க’... சூழ்நிலைக்கேற்ற சுசீந்திரன் - கிளைட்டனின் நச் நச் வசனங்கள் படத்தின் பலம்! பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் ஏன் இத்தனை ஆவரேஜ் ஸ்கோர் யுவன்? முன்பாதியில் கேம்பஸ் உற்சாக வண்ணங்கள் பொழியும் ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, க்ளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் சேர்க்கிறது. ஆனால், காட்சிகளின் வீரியத்துக்காக அந்தப் பச்சைக் குழந்தையை படாதபாடு படுத்தியிருப்பது... பயங்கரம்!  
   'இளைய தலைமுறை இப்படி இருக்கிறதே’ என்ற இயக்குநரின் ஆதங்க அக்கறையை, அலட்சியமான சம்பவங்கள் அழுத்தமில்லாமல் வீரியமிழக்க வைத்துவிட்டது!      
- விகடன் விமர்சனக் குழு

Thursday, August 29, 2013

குட்டி கதை - பட்டினத்து லிப்ட்

ஹாய் பிரெண்ட்ஸ் !
ரொம்ப நாள் அப்புறம்... உங்களுக்காக ஒரு குட்டி கதை வச்சிருக்கேன்...
வாசிங்க என்ஜாய் பண்ணுங்க!


ஒரு கிராமத்து ஏழை பையனும் அவனோட குடும்பமும் பட்டினம் வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங் மால் கு போனாங்களாம்.

அங்கே அந்த பையன் ஒரு அபூர்வமான விஷயத்த கண்டானாம். உடனே அவன் அப்பா கிட்ட வந்து, "அப்பா அதோ அந்த சுவர் தானாகவே ரெண்டா பிரிஞ்சி தானா முடிகிறது" னு காட்டினானாம்.

முன்ன பின்ன லிப்ட்ட கண்டிராத அப்பனும், "நானும் இப்போ தான் இப்டி ஒன்ன பார்க்குறேன் மகனே" னு வாய பிழந்து பார்த்துகிட்டு இருந்தானாம்.

அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்டி பட்டன தட்டி லிப்ட திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிகிச்சாம். ஆனா இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குது னு பார்த்துகிட்டே இருந்தங்களாம்.

பக்கத்துல இருந்த போர்ட்ல நம்பர் ஒன்னு ஒன்னா கூடிகிட்டே போச்சாம் 1....2.....3.....4.....5......6.... அப்புறம் திரும்ப ஒன்னு ஒன்னா குறைஞ்சி 1 கே  வந்ததும் கதவு திறந்துதாம்.

உள்ள இருந்து ஒரு 24 வயது பெண் - மாடல் அழகி மாதிரி வெளில வந்தாளாம்.

உடனே அந்த அப்பன் பையன் கிட்ட சொன்னானாம் "டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!"




Sunday, June 9, 2013

பிரபலங்கள் பேட்டி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன்! - விஜய் சேதுபதி




'பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' "சூது கவ்வும்' படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு மிகவும் பிசியாகி விட்டார் விஜய் சேதுபதி. 

"ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்', "சங்கு
தேவன்'......என்று இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் நட்சத்திர நடிகர்களின் படங்களே வெற்றி பெற திணறும்போது, நீங்கள் நடித்த படங்கள் தொடர் வெற்றி பெற்று வருகின்றனவே...?
என்னைப் பார்க்கும் எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்வி இதுதான். இந்த வெற்றிக்கு நான் மட்டும் சொந்தக்காரன் என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். என்னை திறம்பட நடிக்க வைக்க முடியுமென்று நம்பிய இயக்குநர்கள்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணமாகவும் முக்கிய சூத்திரதாரியாகவும் இருக்கிறார்கள். "தென்மேற்குப் பருவகாற்று' படத்திலேயே நான் பரவலாக கவனிக்கப்பட்டேன். ஆயினும் இரண்டு வருடங்கள் எனக்கு படமே இல்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படப்பிடிப்பிற்கு அவ்வப்போது போய் விட்டு வருவேன். ஆரம்பத்தில் அந்தப் படத்தின்மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் நடிக்கவே ஆரம்பித்தேன். ஆனால் போகப் போக ஈடுபாடு ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. வாய்ப்பே இல்லாமல் இருந்தபோது, வந்த நிதானம்தான் அடுத்தடுத்த பயணங்களுக்கான திட்டமிடலைத் தந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ஒவ்வொரு படத்திலும் செய்து முடித்து விட்டால் எந்த ஒரு நடிகராலும் வெற்றிகளைத் தொடர்ந்து கொடுக்க முடியும். இதுவரை வெற்ற வெற்றிகள் பெரிய விஷயமல்ல. இதைப் போலவே இனி வரும் படங்களும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதால் இன்னும் கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்.



தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் பெரிய பேனர், புகழ் பெற்ற இயக்குநர் என்று முயற்சிக்காமல் இன்னமும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருக்கின்றீர்கள் போலிருக்கிறதே?

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவில் இருக்கும் அறிமுக இயக்குநர்கள்தான் நிறைய புதுப்புது விஷயங்களை வைத்திருப்பார்கள். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறிதான் அவர்களை அப்படி புதிது புதிதாக சிந்திக்க வைக்கும். இப்படிச் சொல்வதால் நான் முன்னணி இயக்குநர்களை குறை கூறுவதாகவோ அவர்களது திறமையை குறைத்து மதிப்பிடுவதாகவோ பொருள் அல்ல. யாராக இருந்தாலும் நான் கதை கேட்காமல் நடிக்க மாட்டேன். என்னுடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம், கதைதான். இயக்குநர் யாராக இருந்தாலும், கதை அழுத்தமாக இருக்க வேண்டும். நல்ல கதை இருந்தால் மட்டுமே அதை இயக்குநர் சிறப்பாக திரையில் வடிக்க முடியும். சட்டியிலேயே இல்லையென்றால் எங்கிருந்து அகப்பையில் வரும்? என் படங்களுக்கு பெரிய வியாபாரம் கிடையாது. முதல் நாள் ஓப்பனிங்கும் இருக்காது. ஆனால் இதையெல்லாம் தாண்டி நான் நடிக்கும் சினிமா ஜெயிக்கும். பெரிய பேனரா புகழ் பெற்ற இயக்குநரா என்று பார்த்து நான் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. படத்தின் கதை என்னை சலனப்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம்.



நீங்கள் நடித்து வெளிவந்த படங்களாகட்டும் அல்லது இப்போது நடித்து வரும் படங்களாகட்டும் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கின்றனவே?

நான் நடித்து வெளியான படங்களின் எப்படி வித்தியாசமாக இருந்ததோ அதைப் போலவே இப்போது நடித்து வரும் படங்களும் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்தக் கதைகள் எல்லாம் மாறுபட்ட களன்களைக் கொண்டிருந்தாலும், எனக்கு பிடித்த கதை "ரம்மி'. சுமார் இருபது வருடங்களாக சினிமா துறையில் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் இயக்குகிறார். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடலின் வரிகள்தான் கதை. நாம ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைத்தால், வாழ்க்கை நம்மை வேறு ஒரு இடத்துக்கு இழுத்துச் செல்லும். கால வெள்ளத்தில் அடித்துச் செல்கிறபோது நடக்கிற சம்பவங்கள்தான் "ரம்மி'. என்னுடன் இனிகோ பிரபாகர், சூரி இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கும். பண்ணையாருக்கும் பத்மினி என்ற காருக்கும் இருக்கிற உறவுதான் "பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் கதை. இதில் எனக்கு கார் டிரைவர் கேரக்டர்.



"சங்கு தேவன்' படம் மூலமா தயாரிப்பாளராகவும் களம் இறங்கி விட்டீர்களே...?

நான் என்னுடைய சொந்தப் படத்தைப் போட்டு இந்தப் படத்தைத் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜேஎஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்காக தயாரிக்க இருக்கிறேன். அப்படத்தில் எனக்கு டிப்பர் லாரி டிரைவர் வேடம். படத்தயாரிப்பில் இருக்கும் நுணுக்கங்களை "சங்குதேவன்' கற்றுத் தரும் என நம்புகிறேன்.



வளர்ந்து வரும் நடிகர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்?

எனக்கு சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும். காரணம் அவருடைய டைமிங் சென்ஸ். அவரைப் பார்க்கும் போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
சமகாலத்தில் இப்படி ஒரு திறமையன நபர் இருப்பது நல்லதுதான். அப்போதுதானே ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். "அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. உண்மையாகவே அவருக்கு ஆர்வம் அதிகம். இவர்கள் நடித்த படங்களை சமீபத்தில்தான் பார்த்தேன். இன்னும் நிறைய பேரையும் பிடிக்கும்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸ்ல அஜித், விஜய், விக்ரம், சூர்யா மாதிரி சிலர்தான் இருக்காங்க. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதின்னு அடுத்த ரேஸு க்கு சில பேர் வந்துட்டீங்க.. உங்கள் இலக்கு என்ன...?

யாராக இருந்தாலும் ஹிட் முதலிடம் தரும். ஆனால், திறமைதான் நம் காலத்துக்குப் பிறகும் நிற்கும். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை விட, என் கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எப்போதும் என் மனதில் நிற்கும். இப்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். எனக்கென்று எந்த ஹிஸ்ட்ரியும் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். ஹீரோவாகி விட்டேன். இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டின்னா எனக்கு நானேதான். எனக்கு எந்த ரேஸிலும் சேர்வது பிடிக்காது. சேர்ந்ததும் கிடையாது.


குட்டிப் புலி - விகடன் விமர்சனம்


கராறையே வரலாறாகக்கொண்ட 'குட்டிப் புலி’!

ஊருக்காக உயிரையே கொடுக்கும் சண்டியர் லால், அவரின் லேட்டஸ்ட் வெர்ஷன் மகன் சசிகுமார், மகனைத் திருத்த நினைக்கும் அம்மா சரண்யா, சசியைக் காதலிக்கும் லட்சுமி மேனன், இவர்களைச் சுற்றி முறைப்பும் விறைப்புமான வில்லன்கள். நிறையச் சத்தம், நிறைய யுத்தம்... இதுவே குட்டிப்புலி!

சங்கு அறுக்கும் மற்றுமொரு 'சசிகுமார் ஸ்டைல்’ படம். அதில் அம்மா சென்டிமென்ட் மசாலாவை அழுத்தமாகக் கலக்கி, பெண்களின் பெருமை பேச முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் முத்தையா. ஆனால், படம் நெடுகப் பல காட்சிகள் இதற்கு முன் வந்த பல 'தகராறு’ படங்களைத் தாறுமாறாக நினைவுபடுத்திச் செல்கின்றனவே?

பில்டப் ஓப்பனிங், உச்ச டெஸிபல் ஹீரோயிசம், பஞ்ச் வசனங்கள் என சசிகுமார் 'புதிதாக’ ஒன்றை முயற்சித்திருக்கிறார். ஆனால், யாரை எதற்காக அடிக்கிறார், அவருடைய லட்சியம் என்ன என்று படத்தில் எந்த டீடெய்லும் இல்லாததால், புலியின் உறுமலில் வீரியம் இல்லை. 'லட்சுமி மேனனைக் காதலிக்காதே’ என்று எச்சரிப்பதற்காகத்தான் வில்லன், சசியைக் கூப்பிடுகிறான். ஆனால், அவனைப் பேச விடாமல் வாலன்டியராக வம்பிழுத்து,
அடிதடி நடத்திப் பிரச்னையைப் பெரிதாக்குகிறார் சசிகுமார். இதில் யார் வில்லன்?

கன்னி தோன்றி காதல் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய 'நல்ல ரவுடியைக் காதலிக்கும் அமைதிப் பெண்’ கேரக்டர் லட்சுமி மேனனுக்கு. என்னத்தைச் சொல்ல..?

மகனுக்காக வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுப்பது, சசிகுமார் திருமணத்துக்குச் சம்மதித்ததும் சந்தோஷமும் கொண்டாட்டமுமாகத் தோழியிடம் பேசுவது என சரண்யா 'அக்மார்க் அம்மா’வாக அசத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் 'அம்மா’ என்றால் 'அவர்’ நினைவுவருவதுபோல, தமிழ் சினிமாவில் 'அம்மா’ என்றால் சுங்குடிச் சேலையுடன் சரண்யா நினைவுக்கு வருவது... நமக்கும் அவருக்கும் நல்லதா... கெட்டதா? சிவந்த விழிகளும், கலைந்த தலையும், திமுதிமு உடம்புமாக அப்படியே 'அட்டாக் பாண்டி’யை நினைவுபடுத்துகிறார் வில்லன் ராஜசிம்மன்.


வழக்கமாக சசிகுமார் படங்களில் காமெடி பேக்கேஜ் பக்காவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வளமான காமெடிக் கும் பஞ்சம். வேலைவெட்டி இல்லாத நான்கு கேரக்டர்கள் வளவளவெனப் பேசிக்கொண்டே இருப்பது... வெயிலில் வெந்நீர் குடிப்பதுபோல வெறி ஏற்றுகிறது! 

வன்முறையால் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வன்முறையை அப்படி வெறுக்கும் சரண்யா, கடைசிக் காட்சியில் அந்த முடிவை எடுக்கும் இடம் மட்டுமே திக்... திடுக்! ஆனால், சசிகுமார் கதாபாத்திரத்தின் மீது நமக்கு அழுத்தமான ஈர்ப்பு இல்லாததால், சரண்யாவின் அந்த முடிவு தேவையான சுரீர் விளைவைக் கொடுக்காமல் வேடிக்கையாக க்ராஸ் செய்கிறது. ஜிப்ரானின் இசையில் 'காத்து காத்து’ மட்டும் கேட்கிற ரகம். ஆனால், படத்தில் பின்னணி இசை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இளையராஜா மெலடிகளால் நிரப்பியிருப்பது... நியாயமாரே? 
'ஆம்பளை கெட்டா, வாழ்க்கைதான் போச்சு... பொம்பளை கெட்டா, வம்சமே போச்சு!’, 'நீ ஆம்பளைனு நிரூபிக்கவும் ஒரு பொம்பளைதாண்டா வேணும்!’ - டைரக்டர் சார்... நாம எந்த ஜெனரேஷன்ல இருக்கோம்? பெண்கள் விண்வெளிக்கும், நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கும் செல்லும் ஜெனரேஷன் இது! இந்தக் காலத்தில் இப்படியரு பிற்போக்குப் பார்வை தேவைதானா?

சாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்தாலே, ஒவ்வோர் அம்மாவும் தன் பிள்ளைகளைக் காக்கும் வீராங்கனைதான். ஆனால், படத்தின் பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெருமையையும் வீரத்தையுமே தூக்கிப் பிடிக்கிறதே... ஏன் சார்?

குண்டுச்சட்டியில் குதிரைக்குப் பதில்... புலி !

Saturday, June 8, 2013

RAANJHANAA- ராஞ்ச்ஹனா - தனுஷ்



தனுஷ் இந்தி திரை உலகில் கால் பதிக்கும் திரைப்படம் ராஞ்ச்ஹனா
காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தை ஆனந்த L ராஜ் இயக்கியுள்ளார்.
ரஹ்மான் இசையமைத்து உள்ள இத்திரைப்பட பாடல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாக உள்ளது.

download songs here



உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெல்லாம் உலவுகிறது என்று தேடித்தரும் இணையதளம் !!


உங்களை அறியாமலே உங்கள் புகைப்படங்கள் இணையத்தின் ஒரு சில பகுதிகளில் இணைக்கபட்டிருக்கலாம். செய்திகள், துணுக்குகள், பேஸ்புக் இப்படி எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் புகைப்படங்கள் வேறொரு நபரினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மிஸ்யூஸ் செய்யப்படிருக்கலாம்

அது போல எங்கெல்லாம் உங்கள் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சொல்லும் இணையத்தளமே TinEye.

இங்கு நீங்கள் உங்கள் புகைப்படத்தை இணைத்திருக்கும் பக்கத்தின் முகவரியையோ (URL) அல்லது உங்கள் புகைப்படத்தினை தரவேற்றுவதன் மூலமாகவோ இதனை செய்துகொள்ளலாம்.


இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க..


THE PURGE - திரைமுன்னோட்டம் - அமெரிக்கா - இங்கு சட்டப்படி கொலை செய்யலாம்



FILE
என்னது... அமெரிக்காவில் கொலை செய்வது தவறில்லையா? ஆனால் இது இன்றைய அமெரிக்காவில் இல்லை. 2022 ல். பு‌ரியவில்லை?

யூனிவர்சல் பிக்சர்ஸின் த பர்‌ஜ் இன்று வெளியாகியிருக்கிறது. த்‌ரில்லர் படம். ப்ளும் புரொடக்ஷன் தயா‌ரிப்பான இதற்கு யூனிவர்சல் செலவழித்தது 3 மில்லியன் டாலர்கள் மட்டுமே. அவர்கள்தான் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

2002 ல் அமெரிக்காவில் குற்றங்கள் அதிக‌ரித்து விடுகிறது. சிறைகளில் குற்றவாளிகளை அடைக்க இடமில்லை. மக்கள் தொகையும் அதிகம். அதனால் அரசாங்கமே வருடத்துக்கு ஒருமுறை பன்னிரண்டு மணி நேரம் அமெரிக்காவை ஃப்‌ரியாக விட்டுவிடுகிறது. அதாவது பன்னிரண்டு மணி நேரத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், கொலை கூட. எதுவுமே குற்றமில்லை. குற்றவாளிகளின், மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடத்தப்படும் இந்த பன்னிரண்டு மணிநேர சுத்திக‌ரிப்புதான் த பர்‌ஜ்.
FILE

மே 24 வெளியான நாளிலிருந்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் பாஸ்ட் அண்ட் பியூ‌ரியஸ் 6 படத்தை பின்னுக்குத் தள்ளி த பர்‌ஜ் முதலிடத்தை பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். 

2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை 7 மணி முதல் காலை 7 மணிவரை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பன்னிரண்டு மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சட்டம் கண் மூடிக் கொள்ளும். படத்தின் நாயகன் தனது டீன்ஏ‌ஜ் மகள் மற்றும் 14 வயது மகனுடன் பலத்த செக்யூ‌ரிட்டி சிஸ்டம் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிக்கிறான். தெருவில் ஒருவன் உயிருக்குப் பயந்து அலறுவதைப் பார்க்கும் மகன் அவனை வீட்டிற்குள் அனுமதிக்கிறான். அதனைத் தொடர்ந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு நொடியும் கொல வெறிதான்.

ஆர் ரேட்டட் படமான இது இளைஞர்களை அதிகம் கவரும், வார இறுதியில் 26 மில்லியன் டாலர்களை படம் வசூலிக்கும் என யூனிவர்சல் கனவு காண்கிறது. அமெரிக்காவின் மனநிலைக்கு 26 மில்லியன் கம்மிதான்.


- நன்றி WEBDUNAI 

ஒசாமாவைக் கொல்ல திட்டமிட்ட இலங்கைத் தமிழருக்கு விருது!


சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, நைட்விஷன் என்ற டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.



- நன்றி WEBDUNAI

Wednesday, June 5, 2013

விஜய் டிவி - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - நடந்தது என்ன !


பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஒளிபரப்பப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு காரணம் - கடந்த வாரம் வியாழன் அன்
று போட்டியில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி (கான்ஸ்டபிள்) ஒருவர் ஓரிரு கேள்விகளுக்கு சரியான பதில் கொடுத்ததும் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் வந்து விட்டது. மறுநாள் அவர் தொடந்து விளையாடும் நிகழ்ச்சி ஒளிபரப்ப படவில்லை. மாறாக சிவகார்த்திகேயன் பங்குபெற்ற பழைய நிகழ்ச்சியே ஒளிபரப்பப்பட்டது.

அப்போவே மைன்டுல லைட்டா ஒரு டவுட்டு வந்தது. விஜய் டிவியின் வழக்கமான விளம்பர உத்தி ஏதும் இருக்குமோ னு.

அடுத்த நாளே விளம்பரம் வந்தது - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - you created history in this stage னு அந்த போலீஸ் அதிகாரி ஒரு கோடி வெல்வதை போன்று கட்டினார்கள்.

சரி என்னதான் நடக்கிறது என்று இந்த வாரம் திங்கட்கிழமை நிகழ்ச்சியை பார்த்தால் அன்றும் பழைய எபிசோடு தான் காட்டப்பட்டது.
ஓவர் பில்ட்டப்பா இருக்கேனு அடுத்த நாளும் பார்த்தேன். வந்தார் போலீஸ் அதிகாரி.

கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசால்ட்டாக பதில்களை போட்டு தாக்கினார். முதல் 10 கேள்விகளுக்கும் லைப் லைன் ஏதும் பயன்படுத்தாமலே பதில் சொன்னவர். 11வது கேள்வியில் ஆடியன்ஸ் போல் ஐ எடுத்தார். 13வது கேள்விக்கு சரியான பதில் சொன்னவுடன் நிகழ்ச்சி முடிவடைய, கிட்டத்தட்ட மக்கள் மத்தியில் ஒரு ஹாட் டாபிக் ஆனது இந்த போலீஸ் அதிகாரி பங்குபெற்ற நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி, ஒரு கோடிக்கு  இரண்டே கேள்விகள் இருக்கும் நிலையில் தொடங்கியது. முதலாவதாக கேட்கபட்ட 14வது கேள்விக்கு அதிரடியாக பதில் கொடுத்து அசத்தினார் அதிகாரி.

15வது கேள்வி - இரண்டு லைப் லைன்கள் மீதம் இருக்க கேட்கப்பட்டது.
தூர்தர்சன் தொடக்க இசையில் பங்காற்றியவர் பற்றிய கேள்வி. 50:50 இரண்டு விடைகளை விடுவித்தது.

அதிகாரி கொஞ்சம் தடுமாறினார். இறுதியில் சரியான முடிவு எடுத்து, 50 லட்சத்துடன் போட்டியில் இருந்து விலகினார். அவர் கணித்த பால முரளி கிருஷ்ணா பிழையானது. பண்டிட் ரவிசங்கர் என்பதே சரியான பதில்.
(பாலமுரளி கிருஷ்ணா இல்லை னு எனக்கு அப்போவே தோனிச்சி. காரணம் அவர் ஒரு தென் இந்தியர்)

எதிர்பார்ப்போடு பார்த்த நமக்கு வடை போச்சே னு ஆகிவிட்டது. விஜய் டிவியின்  விளம்பர உத்தி நம்மை ஏமாற்றினாலும், அந்த நிகழ்ச்சிக்கு நிறைய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி விட்டிருக்கிறது.

எது எப்படியோ - சினிமாவில் மாத்திரம் போலீஸ் ஹீரோவை பார்த்திருந்த நமக்கு அந்த அதிகாரி நிஜமான ஹீரோ போலவே தெரிந்தார்.

அவர் சொன்ன சில வரிகள் சூப்பர் - நான் கடவுளை நம்ப மாட்டேன். எப்டி கடவுளை நான் நம்புறதில்லையோ அது போல அதிர்ஷ்டத்தையும் நம்புறதில்ல - இது அவர் 15வது கேள்வியில் விலகியதற்கு சொன்ன பதில்.

சல்யூட் சார் !












சந்தோஷ் சிவனின் "CEYLON" - First look poster



'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'ராவணன் உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமிரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இயக்கி இருக்கிறார்.

'துப்பாக்கி' வெளியான நேரத்தில் 'அடுத்ததாக 'CEYLON' என்ற படத்தினை இயக்க இருக்கிறேன்" என்று அறிவித்தார். இலங்கைப் பற்றிய படமாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இன்று 'Ceylon' படத்தின் FIRST LOOK POSTERஐ தனது ட்விட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன். அப்படியே இலங்கையின் வரைப்படத்தினை கொண்டே அப்படத்தின் FIRST LOOK அமைந்து இருப்பது, படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

படத்தின் டிரெய்லர் குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் இணையத்தில் " படத்தில் வரும் எட்டு இளம் அனாதைகளின் வலியையும், அதே சமயத்தில் நகைச்சுவை சீக்வென்டுகளோடும் ட்ரெயிலர் பக்காவாக வரும் என எடிட்டர் சுரேஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார். நண்பர் அரவிந்த்சாமியின் குரல் படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்'' என்றிருக்கிறார்.
தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்

- நன்றி விகடன்
.