Sunday, June 9, 2013

பிரபலங்கள் பேட்டி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன்! - விஜய் சேதுபதி




'பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' "சூது கவ்வும்' படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு மிகவும் பிசியாகி விட்டார் விஜய் சேதுபதி. 

"ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்', "சங்கு
தேவன்'......என்று இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் நட்சத்திர நடிகர்களின் படங்களே வெற்றி பெற திணறும்போது, நீங்கள் நடித்த படங்கள் தொடர் வெற்றி பெற்று வருகின்றனவே...?
என்னைப் பார்க்கும் எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்வி இதுதான். இந்த வெற்றிக்கு நான் மட்டும் சொந்தக்காரன் என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். என்னை திறம்பட நடிக்க வைக்க முடியுமென்று நம்பிய இயக்குநர்கள்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணமாகவும் முக்கிய சூத்திரதாரியாகவும் இருக்கிறார்கள். "தென்மேற்குப் பருவகாற்று' படத்திலேயே நான் பரவலாக கவனிக்கப்பட்டேன். ஆயினும் இரண்டு வருடங்கள் எனக்கு படமே இல்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படப்பிடிப்பிற்கு அவ்வப்போது போய் விட்டு வருவேன். ஆரம்பத்தில் அந்தப் படத்தின்மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் நடிக்கவே ஆரம்பித்தேன். ஆனால் போகப் போக ஈடுபாடு ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. வாய்ப்பே இல்லாமல் இருந்தபோது, வந்த நிதானம்தான் அடுத்தடுத்த பயணங்களுக்கான திட்டமிடலைத் தந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ஒவ்வொரு படத்திலும் செய்து முடித்து விட்டால் எந்த ஒரு நடிகராலும் வெற்றிகளைத் தொடர்ந்து கொடுக்க முடியும். இதுவரை வெற்ற வெற்றிகள் பெரிய விஷயமல்ல. இதைப் போலவே இனி வரும் படங்களும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதால் இன்னும் கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்.



தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் பெரிய பேனர், புகழ் பெற்ற இயக்குநர் என்று முயற்சிக்காமல் இன்னமும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருக்கின்றீர்கள் போலிருக்கிறதே?

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவில் இருக்கும் அறிமுக இயக்குநர்கள்தான் நிறைய புதுப்புது விஷயங்களை வைத்திருப்பார்கள். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறிதான் அவர்களை அப்படி புதிது புதிதாக சிந்திக்க வைக்கும். இப்படிச் சொல்வதால் நான் முன்னணி இயக்குநர்களை குறை கூறுவதாகவோ அவர்களது திறமையை குறைத்து மதிப்பிடுவதாகவோ பொருள் அல்ல. யாராக இருந்தாலும் நான் கதை கேட்காமல் நடிக்க மாட்டேன். என்னுடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம், கதைதான். இயக்குநர் யாராக இருந்தாலும், கதை அழுத்தமாக இருக்க வேண்டும். நல்ல கதை இருந்தால் மட்டுமே அதை இயக்குநர் சிறப்பாக திரையில் வடிக்க முடியும். சட்டியிலேயே இல்லையென்றால் எங்கிருந்து அகப்பையில் வரும்? என் படங்களுக்கு பெரிய வியாபாரம் கிடையாது. முதல் நாள் ஓப்பனிங்கும் இருக்காது. ஆனால் இதையெல்லாம் தாண்டி நான் நடிக்கும் சினிமா ஜெயிக்கும். பெரிய பேனரா புகழ் பெற்ற இயக்குநரா என்று பார்த்து நான் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. படத்தின் கதை என்னை சலனப்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம்.



நீங்கள் நடித்து வெளிவந்த படங்களாகட்டும் அல்லது இப்போது நடித்து வரும் படங்களாகட்டும் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கின்றனவே?

நான் நடித்து வெளியான படங்களின் எப்படி வித்தியாசமாக இருந்ததோ அதைப் போலவே இப்போது நடித்து வரும் படங்களும் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்தக் கதைகள் எல்லாம் மாறுபட்ட களன்களைக் கொண்டிருந்தாலும், எனக்கு பிடித்த கதை "ரம்மி'. சுமார் இருபது வருடங்களாக சினிமா துறையில் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் இயக்குகிறார். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடலின் வரிகள்தான் கதை. நாம ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைத்தால், வாழ்க்கை நம்மை வேறு ஒரு இடத்துக்கு இழுத்துச் செல்லும். கால வெள்ளத்தில் அடித்துச் செல்கிறபோது நடக்கிற சம்பவங்கள்தான் "ரம்மி'. என்னுடன் இனிகோ பிரபாகர், சூரி இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கும். பண்ணையாருக்கும் பத்மினி என்ற காருக்கும் இருக்கிற உறவுதான் "பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் கதை. இதில் எனக்கு கார் டிரைவர் கேரக்டர்.



"சங்கு தேவன்' படம் மூலமா தயாரிப்பாளராகவும் களம் இறங்கி விட்டீர்களே...?

நான் என்னுடைய சொந்தப் படத்தைப் போட்டு இந்தப் படத்தைத் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜேஎஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்காக தயாரிக்க இருக்கிறேன். அப்படத்தில் எனக்கு டிப்பர் லாரி டிரைவர் வேடம். படத்தயாரிப்பில் இருக்கும் நுணுக்கங்களை "சங்குதேவன்' கற்றுத் தரும் என நம்புகிறேன்.



வளர்ந்து வரும் நடிகர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்?

எனக்கு சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும். காரணம் அவருடைய டைமிங் சென்ஸ். அவரைப் பார்க்கும் போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
சமகாலத்தில் இப்படி ஒரு திறமையன நபர் இருப்பது நல்லதுதான். அப்போதுதானே ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். "அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. உண்மையாகவே அவருக்கு ஆர்வம் அதிகம். இவர்கள் நடித்த படங்களை சமீபத்தில்தான் பார்த்தேன். இன்னும் நிறைய பேரையும் பிடிக்கும்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸ்ல அஜித், விஜய், விக்ரம், சூர்யா மாதிரி சிலர்தான் இருக்காங்க. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதின்னு அடுத்த ரேஸு க்கு சில பேர் வந்துட்டீங்க.. உங்கள் இலக்கு என்ன...?

யாராக இருந்தாலும் ஹிட் முதலிடம் தரும். ஆனால், திறமைதான் நம் காலத்துக்குப் பிறகும் நிற்கும். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை விட, என் கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எப்போதும் என் மனதில் நிற்கும். இப்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். எனக்கென்று எந்த ஹிஸ்ட்ரியும் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். ஹீரோவாகி விட்டேன். இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டின்னா எனக்கு நானேதான். எனக்கு எந்த ரேஸிலும் சேர்வது பிடிக்காது. சேர்ந்ததும் கிடையாது.


குட்டிப் புலி - விகடன் விமர்சனம்


கராறையே வரலாறாகக்கொண்ட 'குட்டிப் புலி’!

ஊருக்காக உயிரையே கொடுக்கும் சண்டியர் லால், அவரின் லேட்டஸ்ட் வெர்ஷன் மகன் சசிகுமார், மகனைத் திருத்த நினைக்கும் அம்மா சரண்யா, சசியைக் காதலிக்கும் லட்சுமி மேனன், இவர்களைச் சுற்றி முறைப்பும் விறைப்புமான வில்லன்கள். நிறையச் சத்தம், நிறைய யுத்தம்... இதுவே குட்டிப்புலி!

சங்கு அறுக்கும் மற்றுமொரு 'சசிகுமார் ஸ்டைல்’ படம். அதில் அம்மா சென்டிமென்ட் மசாலாவை அழுத்தமாகக் கலக்கி, பெண்களின் பெருமை பேச முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் முத்தையா. ஆனால், படம் நெடுகப் பல காட்சிகள் இதற்கு முன் வந்த பல 'தகராறு’ படங்களைத் தாறுமாறாக நினைவுபடுத்திச் செல்கின்றனவே?

பில்டப் ஓப்பனிங், உச்ச டெஸிபல் ஹீரோயிசம், பஞ்ச் வசனங்கள் என சசிகுமார் 'புதிதாக’ ஒன்றை முயற்சித்திருக்கிறார். ஆனால், யாரை எதற்காக அடிக்கிறார், அவருடைய லட்சியம் என்ன என்று படத்தில் எந்த டீடெய்லும் இல்லாததால், புலியின் உறுமலில் வீரியம் இல்லை. 'லட்சுமி மேனனைக் காதலிக்காதே’ என்று எச்சரிப்பதற்காகத்தான் வில்லன், சசியைக் கூப்பிடுகிறான். ஆனால், அவனைப் பேச விடாமல் வாலன்டியராக வம்பிழுத்து,
அடிதடி நடத்திப் பிரச்னையைப் பெரிதாக்குகிறார் சசிகுமார். இதில் யார் வில்லன்?

கன்னி தோன்றி காதல் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய 'நல்ல ரவுடியைக் காதலிக்கும் அமைதிப் பெண்’ கேரக்டர் லட்சுமி மேனனுக்கு. என்னத்தைச் சொல்ல..?

மகனுக்காக வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுப்பது, சசிகுமார் திருமணத்துக்குச் சம்மதித்ததும் சந்தோஷமும் கொண்டாட்டமுமாகத் தோழியிடம் பேசுவது என சரண்யா 'அக்மார்க் அம்மா’வாக அசத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் 'அம்மா’ என்றால் 'அவர்’ நினைவுவருவதுபோல, தமிழ் சினிமாவில் 'அம்மா’ என்றால் சுங்குடிச் சேலையுடன் சரண்யா நினைவுக்கு வருவது... நமக்கும் அவருக்கும் நல்லதா... கெட்டதா? சிவந்த விழிகளும், கலைந்த தலையும், திமுதிமு உடம்புமாக அப்படியே 'அட்டாக் பாண்டி’யை நினைவுபடுத்துகிறார் வில்லன் ராஜசிம்மன்.


வழக்கமாக சசிகுமார் படங்களில் காமெடி பேக்கேஜ் பக்காவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வளமான காமெடிக் கும் பஞ்சம். வேலைவெட்டி இல்லாத நான்கு கேரக்டர்கள் வளவளவெனப் பேசிக்கொண்டே இருப்பது... வெயிலில் வெந்நீர் குடிப்பதுபோல வெறி ஏற்றுகிறது! 

வன்முறையால் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வன்முறையை அப்படி வெறுக்கும் சரண்யா, கடைசிக் காட்சியில் அந்த முடிவை எடுக்கும் இடம் மட்டுமே திக்... திடுக்! ஆனால், சசிகுமார் கதாபாத்திரத்தின் மீது நமக்கு அழுத்தமான ஈர்ப்பு இல்லாததால், சரண்யாவின் அந்த முடிவு தேவையான சுரீர் விளைவைக் கொடுக்காமல் வேடிக்கையாக க்ராஸ் செய்கிறது. ஜிப்ரானின் இசையில் 'காத்து காத்து’ மட்டும் கேட்கிற ரகம். ஆனால், படத்தில் பின்னணி இசை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இளையராஜா மெலடிகளால் நிரப்பியிருப்பது... நியாயமாரே? 
'ஆம்பளை கெட்டா, வாழ்க்கைதான் போச்சு... பொம்பளை கெட்டா, வம்சமே போச்சு!’, 'நீ ஆம்பளைனு நிரூபிக்கவும் ஒரு பொம்பளைதாண்டா வேணும்!’ - டைரக்டர் சார்... நாம எந்த ஜெனரேஷன்ல இருக்கோம்? பெண்கள் விண்வெளிக்கும், நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கும் செல்லும் ஜெனரேஷன் இது! இந்தக் காலத்தில் இப்படியரு பிற்போக்குப் பார்வை தேவைதானா?

சாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்தாலே, ஒவ்வோர் அம்மாவும் தன் பிள்ளைகளைக் காக்கும் வீராங்கனைதான். ஆனால், படத்தின் பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெருமையையும் வீரத்தையுமே தூக்கிப் பிடிக்கிறதே... ஏன் சார்?

குண்டுச்சட்டியில் குதிரைக்குப் பதில்... புலி !

Saturday, June 8, 2013

RAANJHANAA- ராஞ்ச்ஹனா - தனுஷ்



தனுஷ் இந்தி திரை உலகில் கால் பதிக்கும் திரைப்படம் ராஞ்ச்ஹனா
காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தை ஆனந்த L ராஜ் இயக்கியுள்ளார்.
ரஹ்மான் இசையமைத்து உள்ள இத்திரைப்பட பாடல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாக உள்ளது.

download songs here



உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெல்லாம் உலவுகிறது என்று தேடித்தரும் இணையதளம் !!


உங்களை அறியாமலே உங்கள் புகைப்படங்கள் இணையத்தின் ஒரு சில பகுதிகளில் இணைக்கபட்டிருக்கலாம். செய்திகள், துணுக்குகள், பேஸ்புக் இப்படி எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் புகைப்படங்கள் வேறொரு நபரினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மிஸ்யூஸ் செய்யப்படிருக்கலாம்

அது போல எங்கெல்லாம் உங்கள் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சொல்லும் இணையத்தளமே TinEye.

இங்கு நீங்கள் உங்கள் புகைப்படத்தை இணைத்திருக்கும் பக்கத்தின் முகவரியையோ (URL) அல்லது உங்கள் புகைப்படத்தினை தரவேற்றுவதன் மூலமாகவோ இதனை செய்துகொள்ளலாம்.


இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க..


THE PURGE - திரைமுன்னோட்டம் - அமெரிக்கா - இங்கு சட்டப்படி கொலை செய்யலாம்



FILE
என்னது... அமெரிக்காவில் கொலை செய்வது தவறில்லையா? ஆனால் இது இன்றைய அமெரிக்காவில் இல்லை. 2022 ல். பு‌ரியவில்லை?

யூனிவர்சல் பிக்சர்ஸின் த பர்‌ஜ் இன்று வெளியாகியிருக்கிறது. த்‌ரில்லர் படம். ப்ளும் புரொடக்ஷன் தயா‌ரிப்பான இதற்கு யூனிவர்சல் செலவழித்தது 3 மில்லியன் டாலர்கள் மட்டுமே. அவர்கள்தான் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

2002 ல் அமெரிக்காவில் குற்றங்கள் அதிக‌ரித்து விடுகிறது. சிறைகளில் குற்றவாளிகளை அடைக்க இடமில்லை. மக்கள் தொகையும் அதிகம். அதனால் அரசாங்கமே வருடத்துக்கு ஒருமுறை பன்னிரண்டு மணி நேரம் அமெரிக்காவை ஃப்‌ரியாக விட்டுவிடுகிறது. அதாவது பன்னிரண்டு மணி நேரத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், கொலை கூட. எதுவுமே குற்றமில்லை. குற்றவாளிகளின், மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடத்தப்படும் இந்த பன்னிரண்டு மணிநேர சுத்திக‌ரிப்புதான் த பர்‌ஜ்.
FILE

மே 24 வெளியான நாளிலிருந்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் பாஸ்ட் அண்ட் பியூ‌ரியஸ் 6 படத்தை பின்னுக்குத் தள்ளி த பர்‌ஜ் முதலிடத்தை பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். 

2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை 7 மணி முதல் காலை 7 மணிவரை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பன்னிரண்டு மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சட்டம் கண் மூடிக் கொள்ளும். படத்தின் நாயகன் தனது டீன்ஏ‌ஜ் மகள் மற்றும் 14 வயது மகனுடன் பலத்த செக்யூ‌ரிட்டி சிஸ்டம் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிக்கிறான். தெருவில் ஒருவன் உயிருக்குப் பயந்து அலறுவதைப் பார்க்கும் மகன் அவனை வீட்டிற்குள் அனுமதிக்கிறான். அதனைத் தொடர்ந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு நொடியும் கொல வெறிதான்.

ஆர் ரேட்டட் படமான இது இளைஞர்களை அதிகம் கவரும், வார இறுதியில் 26 மில்லியன் டாலர்களை படம் வசூலிக்கும் என யூனிவர்சல் கனவு காண்கிறது. அமெரிக்காவின் மனநிலைக்கு 26 மில்லியன் கம்மிதான்.


- நன்றி WEBDUNAI 

ஒசாமாவைக் கொல்ல திட்டமிட்ட இலங்கைத் தமிழருக்கு விருது!


சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, நைட்விஷன் என்ற டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.



- நன்றி WEBDUNAI

Wednesday, June 5, 2013

விஜய் டிவி - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - நடந்தது என்ன !


பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஒளிபரப்பப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு காரணம் - கடந்த வாரம் வியாழன் அன்
று போட்டியில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி (கான்ஸ்டபிள்) ஒருவர் ஓரிரு கேள்விகளுக்கு சரியான பதில் கொடுத்ததும் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் வந்து விட்டது. மறுநாள் அவர் தொடந்து விளையாடும் நிகழ்ச்சி ஒளிபரப்ப படவில்லை. மாறாக சிவகார்த்திகேயன் பங்குபெற்ற பழைய நிகழ்ச்சியே ஒளிபரப்பப்பட்டது.

அப்போவே மைன்டுல லைட்டா ஒரு டவுட்டு வந்தது. விஜய் டிவியின் வழக்கமான விளம்பர உத்தி ஏதும் இருக்குமோ னு.

அடுத்த நாளே விளம்பரம் வந்தது - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - you created history in this stage னு அந்த போலீஸ் அதிகாரி ஒரு கோடி வெல்வதை போன்று கட்டினார்கள்.

சரி என்னதான் நடக்கிறது என்று இந்த வாரம் திங்கட்கிழமை நிகழ்ச்சியை பார்த்தால் அன்றும் பழைய எபிசோடு தான் காட்டப்பட்டது.
ஓவர் பில்ட்டப்பா இருக்கேனு அடுத்த நாளும் பார்த்தேன். வந்தார் போலீஸ் அதிகாரி.

கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசால்ட்டாக பதில்களை போட்டு தாக்கினார். முதல் 10 கேள்விகளுக்கும் லைப் லைன் ஏதும் பயன்படுத்தாமலே பதில் சொன்னவர். 11வது கேள்வியில் ஆடியன்ஸ் போல் ஐ எடுத்தார். 13வது கேள்விக்கு சரியான பதில் சொன்னவுடன் நிகழ்ச்சி முடிவடைய, கிட்டத்தட்ட மக்கள் மத்தியில் ஒரு ஹாட் டாபிக் ஆனது இந்த போலீஸ் அதிகாரி பங்குபெற்ற நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி, ஒரு கோடிக்கு  இரண்டே கேள்விகள் இருக்கும் நிலையில் தொடங்கியது. முதலாவதாக கேட்கபட்ட 14வது கேள்விக்கு அதிரடியாக பதில் கொடுத்து அசத்தினார் அதிகாரி.

15வது கேள்வி - இரண்டு லைப் லைன்கள் மீதம் இருக்க கேட்கப்பட்டது.
தூர்தர்சன் தொடக்க இசையில் பங்காற்றியவர் பற்றிய கேள்வி. 50:50 இரண்டு விடைகளை விடுவித்தது.

அதிகாரி கொஞ்சம் தடுமாறினார். இறுதியில் சரியான முடிவு எடுத்து, 50 லட்சத்துடன் போட்டியில் இருந்து விலகினார். அவர் கணித்த பால முரளி கிருஷ்ணா பிழையானது. பண்டிட் ரவிசங்கர் என்பதே சரியான பதில்.
(பாலமுரளி கிருஷ்ணா இல்லை னு எனக்கு அப்போவே தோனிச்சி. காரணம் அவர் ஒரு தென் இந்தியர்)

எதிர்பார்ப்போடு பார்த்த நமக்கு வடை போச்சே னு ஆகிவிட்டது. விஜய் டிவியின்  விளம்பர உத்தி நம்மை ஏமாற்றினாலும், அந்த நிகழ்ச்சிக்கு நிறைய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி விட்டிருக்கிறது.

எது எப்படியோ - சினிமாவில் மாத்திரம் போலீஸ் ஹீரோவை பார்த்திருந்த நமக்கு அந்த அதிகாரி நிஜமான ஹீரோ போலவே தெரிந்தார்.

அவர் சொன்ன சில வரிகள் சூப்பர் - நான் கடவுளை நம்ப மாட்டேன். எப்டி கடவுளை நான் நம்புறதில்லையோ அது போல அதிர்ஷ்டத்தையும் நம்புறதில்ல - இது அவர் 15வது கேள்வியில் விலகியதற்கு சொன்ன பதில்.

சல்யூட் சார் !












சந்தோஷ் சிவனின் "CEYLON" - First look poster



'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'ராவணன் உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமிரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இயக்கி இருக்கிறார்.

'துப்பாக்கி' வெளியான நேரத்தில் 'அடுத்ததாக 'CEYLON' என்ற படத்தினை இயக்க இருக்கிறேன்" என்று அறிவித்தார். இலங்கைப் பற்றிய படமாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இன்று 'Ceylon' படத்தின் FIRST LOOK POSTERஐ தனது ட்விட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன். அப்படியே இலங்கையின் வரைப்படத்தினை கொண்டே அப்படத்தின் FIRST LOOK அமைந்து இருப்பது, படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

படத்தின் டிரெய்லர் குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் இணையத்தில் " படத்தில் வரும் எட்டு இளம் அனாதைகளின் வலியையும், அதே சமயத்தில் நகைச்சுவை சீக்வென்டுகளோடும் ட்ரெயிலர் பக்காவாக வரும் என எடிட்டர் சுரேஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார். நண்பர் அரவிந்த்சாமியின் குரல் படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்'' என்றிருக்கிறார்.
தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்

- நன்றி விகடன்
.

Sunday, June 2, 2013

நேரம் - விகடன் திரை விமர்சனம்


கெட்ட நேரம், நல்ல நேரம்... இரண்டுக்கும் இடையில் அல்லாடுபவனின் 'நேரம்’!
டைட்டில் ஸ்லைடில் 'தேங்க்ஸ் டு மை எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்...எஸ்பெஷலி தி லாஸ்ட் ஒன்’ என்று திரையிடு வதில் ஆரம்பிக்கும் குறும்புச் சேட்டை இறுதிக் காட்சி வரை தடதடக்கிறது!  
ஒரு நாளின் விடியலில் ஹீரோ நிவினுக்கு கடன், காதல், சொந்தம் என அனைத்துத் தரப்பில் இருந்தும் சிக்கல்கள். அந்த நாளின் முடிவுக்குள் ஹீரோவின் நேரம் எப்படி அனைத்தையும் சரிசெய்கிறது என்பதே படம். எப்படியும் நாயகன் ஜெயிப்பார் என்றாலும், எப்படி ஜெயித்தார் என்பதை செம ஜாலி, கேலிக் கலாட்டாவாகச் சொன்ன விதத்தில் கவனிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்தரன்.
கேரள இறக்குமதியான (!) அறிமுக ஹீரோ நிவின்... பதற்றம், கவலை, கோபம் என எல்லா உணர்வுகளையும் ஹீரோயிஸமே இல்லாமல் செய்து பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். கொஞ்சம் சமந்தா, கொஞ்சம் காஜல் என நெஞ்சில் ஜில்ஜில் மீட்டுகிறார் அறிமுக நாயகி நஸ்ரியா நசீம். நடிப்பிலும் செம ஸ்கோர். க்யூட் ஸ்வீட் எக்ஸ்பிரஷன்களால் மனதைச் சீண்டியவரைப் பெரும் பகுதி நேரம் மறைவிடத்தில் பதுக்கிய திரைக்கதையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
'10 ஆயிரம் ரூபா போன்ங்கிற... பட்டனே இல்லே’ என்று அத்தனை ரணகளத்திலும் கிச்சுகிச்சும் சிம்ஹா, 'சின்ன வயசுல சரவணன்... இப்போ சரவணர்’ என்று தனக்குத்தானே மரியாதை கொடுத்துக்கொள்கிற தம்பி ராமையா, 'தியாகராஜ பாகவதருக்கே பாட்டு கத்துக்கொடுக்குறியா?’ என்று எகிறும் ஜான் விஜய், 'ஆவ்சம்... ஆவ்சம். கம்ப்யூட்டர் தம்பிக்கு நிறையத் தெரிஞ்சிருக்கு’ என்று கெத்து காட்டும் நாசர், பீட்டர் இங்கிலீஷ் மாணிக் எனப் படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் வசனமும் வெல் பில்ட். சரவணர், லைட் ஹவுஸ், கட்ட குஞ்சு, வட்டி ராஜா, காளான் எனக் கதாபாத்திரங்களின் விதவிதமான பெயர்கள்... ரசனை மாமே!  
சென்னை வீதிகளை அத்தனை அழகாகக் காட்டி அசரடிக்கும் ஆனந்த்.நீ சந்திரனின் ஒளிப்பதிவும் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை யும் படத்துக்குப் படா தோஸ்த்துகள். அதிலும் அர்த்தமே இல்லாத 'பிஸ்தா’ பாடல் இளமைத் துள்ளல். அடுத்தடுத்து படையெடுக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.
'ஹே சுருக்க ரிகா முக்கா மொழம் போட்டு மரிக்கொழுந்து கபத்துல மாட்டி பிடிச்சு பிஸ்தா சும்மா கீர சோமாரி ஜமாக்கிராயா’-வாக ஒரு படம். தியேட்டரில் இருக்கும் வரை நல்ல நேரமாக இருக்கிறது!
- விகடன் விமர்சனக் குழு

சோனா பரீயா பாடல் வரிகள் - புதிரா ? அபத்தமா ??


வெளியான ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கி விட்டன மரியான் பாடல்கள். 

90 களில் கேட்ட ரஹ்மான் இசை பின் நாட்களில் கேட்க முடியாமல் போய் விட்டது என்பது ரஹ்மான் ரசிகர்களின் பரவலான கருத்தாக இருந்து வந்தது. அந்த கருத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல மரியான் பாடல்கள் அனைத்தும் அவரது ஆரம்ப கால இசை தரத்தில் வந்துள்ளன. 

பாடல் இசை நிச்சயமாக சூப்பர் என்றாலும், வரிகள் ஏனோ புரிய மறுக்கின்றன. சோனா பரியா பாடல் வரிகளை கேட்கும் போது ஏதோ கண்டதையும் எழுதி கொட்டியது போல உள்ளது.

ஒரு வேலை திரையில் பின்னணி காட்சிகளுடன் பார்க்கும் போது புரியலாம். அப்படியும் புரியாமல் போனால் இது பாமரனுக்கு புரியாத ரகம் என்றோ இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டு என்றோ நமக்கு நாமே சமாதனம் செய்து கொள்ள  வேண்டியது தான். 

சோனா பாரியா வரிகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்காவது புரிகிறதா என்று கொஞ்சம் பாடி பாருங்கள்!


ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல
என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல (2)
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. தானா வாரரியா (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல 

என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 

***


பத்து காலு நண்டு பார்த்தது சோனா பரியா 

அது செத்து சுண்ணாம்பாய் போயி 
ஒத்த காலில் நிக்குதடி 

முத்துக் குளிக்கும் பீட்டரூ சோனா பரியா 

அவன் காய்ஞ்சி கருவாடா போயி 
குவாட்டருல முங்கிட்டானே.... 

அந்தரீயே சுந்தரீயே சோனா பரியா 

மந்திரியே முந்துரியே சோனா பரியா 
அந்தமெல்லாம் சிந்துரீயே சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

***


ஓயல ஓயல... சோனா பரி யாரோ... 

ஓயல... ஓயல(2)
ஓயல யல...

கண்ணுல கப்பல்... ஓயல 

நெஞ்சுல விக்கெல்லு... ஓயல 
கையில நிக்கேல்லா.. ஓயல 
உன் நடையில நக்கலா.. ஓயல 
ஓயல... ஓயல...

சிற்பிக்குள முத்து, கப்பலுல வச்சாம் 

மிச்சம் மிச்சம் வச்சோம் 
முத்த முத்த எடுத்து சிக்கி சிக்கியா 
ஹா... மதி சிக்கி கிச்சா நெஞ்சு விக்கி கிச்சா மச்ச வச்ச மிச்சம்

***
 ஒத்த மரமா எத்தன காலம் சோனா பரியா 

கடலுல போன கட்டுமரமில்ல 
இப்ப கரைதான் யேரிடுச்சே ஆமா..

அத்த மகனும் மாமன் மகனும் சோனா பரியா 

இவன போல கடலின் ஆழம் 
எவனும் கண்டதில்ல தானே..

நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனா பரியா 

மீனு முள்ளா சிக்குறியே சோனா பரியா 
கெஞ்சும் படி வைக்குறியே சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல 

என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 


உலகின் முதன்மை அணி இந்தியா இம்முறை சாம்பியன் ஆகுமா?



ICC சாம்பியன்ஸிப் போட்டிகள் இன்னும் 4 நாட்களில் ஆரம்பமாக உள்ளன.

ICC தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மோதவுள்ள இந்த போட்டித் தொடரின் முதன்மை அணியாக இந்தியா இடம்பெறுகிறது.





.



ICC தர வரிசை நிலைவரம் இதோ,
  1. இந்தியா                                   - 119  புள்ளிகள்
  2. அவுஸ்திரேலியா                - 116  புள்ளிகள்
  3. இங்கிலாந்து                          - 114  புள்ளிகள்
  4. தென் ஆபிரிக்கா                  - 113  புள்ளிகள்
  5. இலங்கை                                - 108  புள்ளிகள்
  6. பாகிஸ்தான்                           - 105  புள்ளிகள்
  7. மேற்கு இந்திய தீவுகள்    -   86  புள்ளிகள்
  8. நியூசீலாந்து                          -   85  புள்ளிகள்
  9. வங்கதேசம்                           -   75  புள்ளிகள்
10. ஜிம்பாப்வே                            -   55  புள்ளிகள்
11. அயர்லாந்து                           -   39  புள்ளிகள்
12. நெதர்லாந்து                          -   14  புள்ளிகள்
13. கென்யா                                   -   11  புள்ளிகள்


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு புதிய திருப்பங்களை ஏற்படுத்திய தோனியின் தலைமையும் IPL போட்டிகளில் இனம் காணப்பட்ட இளம் திறமைசாலிகளும் இந்த தடவையும் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றுவார்கள் என்று கிரிகெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ரஜினி சொன்ன குட்டிக் கதை



ரஜினிக்கே மிகப் பிடித்த குட்டிக் கதை!

ஒரு தாய் ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள்.

‘நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள்?’ என்றது குட்டி.

‘அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மணல் பூமி. அதனால்தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள்’ என்றது தாய் ஒட்டகம்.

‘நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள்? கற்கள் போல பற்கள்?’

‘அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள்தாவரங்கள்தானே. அவற்றை மெல்லுவதற்கு வசதியாகக் கடவுள் செய்த ஏற்பாடு!’

‘நம் உடலில் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை?’

‘அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்தால், நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணைகொண்டு கடவுள் தந்த பரிசு இது!’ என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும், ‘அதெல்லாம் சரி, பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்கஸில் இருக்கிறோம்?’ எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.

இந்தக் கதையை ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு, ‘நாமெல்லாம் சர்க்கஸ் ஒட்டகங்கள்தானே!’ எனச் சிரிப்பது ரஜினி பாணி!

Translation of Cricinfo.com (தமிழாக்கம்)

The longest spell, and ten wickets and losing


Also: unchanged XIs, most wickets as captain, father and son's same stats, longest Test careers, and more Olympic gold stadiums
May 28, 2013
Text size: A | A

Hrishikesh Kanitkar trains ahead of the Ranji final, Chennai, January 17, 2012
Hrishikesh Kanitkar: played two Tests, same as his father Hemant © K Sivaraman 
Enlarge
Tim Southee took ten wickets in the Lord's Test - but New Zealand still lost. Has this ever happened before in Test cricket? asked Simon Hood from Australia
டிம் சௌதீ லோர்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்ற போட்டியில் 10 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தும், நியூசீலாந்து அணி தோல்வியை தழுவியது. இது போன்று சம்பவம் இதற்கு முன் டெஸ்ட் போட்டி ஒன்றில் இடம்பெற்று உள்ளதா?

You'll probably be surprised to discover that Tim Southee's valiant effort at Lord's - he took 10 for 108 but lost - was actually the 69th occasion on which a bowler has bagged ten or more wickets in a Test but finished up on the losing side. Wasim Akram took ten but lost three times, while Muttiah Muralitharan, Tom Richardson, Saeed Ajmal, Hugh Trumble, Daniel Vettori and Shane Warne have all done it twice. The best match figures in defeat are Javagal Srinath's 13 for 132 for India against Pakistan in Kolkata in 1998-99.
நீங்கள் ஆச்சர்ய படத்தக்க வகையில் பந்து வீச்சாளர் ஒருவர் 10 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தும் அணி தோல்வி அடைந்தவாறன சம்பவம் டெஸ்ட் போட்டியில் நடந்திருப்பது இது  69 வது தடவை ஆகும். வசீம் அக்ரம் 3 தடவைகளும், முத்தையா முரளிதரன், டொம் ரிச்சர்ட்சன், சஹீத் அஜ்மல், ஹுக் ட்ரம்பல், டானியல் விட்டோரி மற்றும் ஷேன் வார்ன் 2 தடவைகளும் இதற்கு முன் இது போன்று செய்துள்ளனர்.
தனது அணி தோல்வி அடைந்த போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் பதிவு செய்த மிக சிறந்த பெறுதியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் 1998-99 இல் ஜவாகல் ஸ்ரீநாத் பெற்ற 132 ஓட்டங்களுக்கு 13 விக்கட்டுக்கள் இடம் பெறுகிறது.
***

New Zealand's team for the Lord's Test was unchanged for the fourth match running - was that a Test record? asked Christopher Dale from New Zealand
நியூசீலாந்து அணி லோர்ட்ஸ் போட்டியின் போது தொடர்ச்சியாக நான்காவது தடவையாக வீரர்கள் பட்டியலில் மாற்றம் எதுவும் இன்றி களம் இறங்கியது - இது ஒரு சாதனையாக அமையுமா?

New Zealand kept the same team for the first Test at Lord's as had done duty throughout the three-Test series against England earlier in the year (injuries forced changes for the second Test, though). It was a new national record - New Zealand had only once before gone even three Tests with an unchanged side, in the West Indies in 1971-72. The overall Test record, however, is six successive Tests with the same XI, achieved by England in 2008 (that run included five matches against New Zealand and one against South Africa).
இதற்கு முன்னர் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் லோர்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்ற முதல் போட்டியிலும் ஒரே பதினொருவர் அணி விளையாடி இருப்பது ஒரு நியூசீலாந்து சாதனை ஆகும். இதற்கு முன் தொடர்ச்சியான மூன்று போட்டிகளில் மாற்றம் இன்றி பங்கு பற்றியமை அவர்களின் சாதனையாக இருந்து வந்தது. 
எவ்வாறாயினும் பொதுவான சாதனையாக தொடர்ச்சியான ஆறு போட்டிகளில் மாற்றம் எதுவும் இன்றி பதினொருவர் பங்கு பற்றி இருந்தமை பதிவாகி உள்ளது. 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இதை செய்திருந்தது (நியூசீலாந்து க்கு எதிராக 5 போட்டிகள் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டி).
***

Who has taken the most wickets while captaining in Tests? asked George Shore from Australia
டெஸ்ட் போட்டி ஒன்றில் கேப்டன் ஆக இருக்கும் கால பகுதியில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் யார்?

Leading the way here is Imran Khan of Pakistan, who took 187 wickets in Tests while captain. Richie Benaud is next with 138, and in fact there are only six other bowler-captains who took more than 100: Garry Sobers (117), Daniel Vettori (116), Kapil Dev (111), Wasim Akram (107), Bishan Bedi (106) and Shaun Pollock (103). Of these, Imran also has the best average (20.27) and strike rate (49.26 balls per wicket) while captain.
பாகிஸ்தான் அணியின் இம்ரான் கான் இந்த பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார். அவர் 187 விக்கட்டுக்களை தான் டெஸ்ட் போட்டிகளில் அணி தலைவராக இருந்த காலத்தில் வீழ்த்தியுள்ளார். ரிச்சி பேனாட் 138 விக்கட்டுக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். மொத்தமாக 6 பேர் மட்டுமே பந்து வீசும் அணி தலைவராக இருந்து 100 க்கும் மேற்பட்ட விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்: கேரி சோபர்ஸ் (117), டேனியல் விட்டோரி (116), கபில் தேவ் (111), வசீம் அக்ரம் (107), பிஷன் பேடி (106) மற்றும் ஷோன் பொல்லாக் (103) அவர்களாவர். 
இவர்களில் இம்ரான் சிறந்த சராசரி (20.27) மற்றும் விகிததினையும் (49.26) கொண்டுள்ளார்.
***

Which father-and-son pair played the same number of Test matches? asked Ashok Rajamani from the United States
எந்த தந்தை-மகன் இருவரும் ஒரே எண்ணிக்கையான டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்?

The answer to this neat little conundrum is the Kanitkars from India: Hemant Kanitkar won two caps against West Indies in 1974-75, scoring 65 on his debut in Bangalore - and his son Hrishikesh (a left-hander, unlike his father) also won two caps, in Australia in 1999-2000, making 45 on debut in Melbourne. Hrishikesh, who's now 38, still captains Rajasthan in the Ranji Trophy - he scored his 33rd first-class hundred last December.
இதற்கான விடை இந்தியாவின் கனிட்கர் கள் ஆகும். ஹேமந்த் கனிட்கர் 1974-75 இல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி, 65 ஓட்டங்களை கன்னி போட்டியிலேயே பெற்றார். அவரது மகன் ஹ்ரிஷிகேஷ்சும் (இடது கை துடுப்பாட்ட வீரர், அவர் தந்தை போல் அன்றி) 1999-2000 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கு பற்றினார். மெல்போர்னில் தனது கன்னி போட்டியில் 45 ஓட்டங்களை பெற்றார். தற்பொழுது 38 வயதாகும் ஹ்ரிஷிகேஷ் ராஜஸ்தான் அணி தலைவராக ரஞ்சி கிண்ண போட்டிகளில் விளையாடி வருகின்றமையும் முதல் தர போட்டிகளில் 33வது சதத்தினை கடந்த டிசம்பர் மாதம் பதிவு செய்தமையும் குறிப்பிட தக்கது.
***

Sachin Tendulkar has now been playing Test cricket for more than 23 years. How many people have longer careers? asked Javed Ahmed from Jameshedpur
சச்சின் டெண்டுல்கர் கடந்த 23வது வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். எத்தனை வீரர்கள் இது போல் அதிக காலம் விளையாடி உள்ளனர்?

Sachin Tendulkar is one of only 16 men whose Test careers have lasted longer than 20 years - the last one to complete two decades before him was John Traicos, of South Africa and Zimbabwe, in 1993. At the moment Tendulkar lies fifth on the all-time list - but he's going to have to hang on until he's 47 if he wants to claim the longest Test career of all, which is currently held by the Yorkshire and England allrounder Wilfred Rhodes. He made his Test debut in 1899 (in WG Grace's final Test), and won the last of his 58 caps in the West Indies in April 1930, when he was, at 52, the oldest man ever to appear in a Test. In all Rhodes's Test career lasted 30 years and 315 days. For the full list, click here.
20 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றிய 16 வீரர்களுள் சச்சின் டெண்டுல்கரும் ஒருவராவார். இவருக்கு முன்னர் கடைசியாக தென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாம்வே யை சேர்ந்த ஜான் ட்ரைகோஸ் இரு தசாப்த காலமாக விளையாடி இருந்தார். 
தற்பொழுது சச்சின் அதிக காலம் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.  ஆனால் இப்பட்டியலில் முதல் இடத்தை பெற அவர் தனது 47வது வயது வரை விளையாட வேண்டி இருக்கும். ஏனெனில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வில்ப்ரெட் ரோட்ஸ் 1899 முதல் 1930 வரை 58 போட்டிகளில் விளையாடி இப்பட்டியலில் முதல் இடம் வகிக்கின்றார். 52ஆவது வயதில் தனது கடைசி போட்டியில் பங்கு பற்றிய வில்ப்ரெட், உலகில் அதிக வயதில் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிய வீரராகவும் பதிவனார். அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மொத்த காலப்பகுதி 30 வருடங்கள் மற்றும் 315 நாட்கள் ஆகும். 
***

Steven Lynch is the editor of the Wisden Guide to International Cricket 2013. Ask Steven is now on Facebook
RSS Feeds: Steven Lynch
© ESPN EMEA Ltd.

Saturday, June 1, 2013

KUTTI PULI MOVIE REVIEW - behindwoods.com

KUTTI PULI MOVIE REVIEW

Release Date : May 30,2013
Kutti Puli
Review by : Behindwoods Review Board
CAST AND CREW
1 of 2
ProductionN Puranna, S Muruganandam
CastLakshmi Menon, M Sasikumar
DirectionM Muthaiah
ScreenplayM Muthaiah
StoryM Muthaiah
MusicM Ghibran
Background scoreM Ghibran 
CinematographyMahesh Muthuswamy
DialoguesM.Muthaiah
EditingGopi Krishnan
SingersGold Devaraj, Kaushiki Chakrabarthy, Padmalatha, Sundar Narayana Rao
Lyrics Ekadesi, Mohan Raj, Vairamuthu 
When Kuttipuli directed by newcomer Muthaiah commences with blood spewing opening shots, you might believe that this could just be a basic arc of the film because it was certified with a U/A by Censors. However, as the story unfolds, you realize that the gore violence is spread all over the 150 minutes reaching a crescendo in the climax. Again, the sanguine tonality of Kuttipuli could still be acceptable if there was a plausible justification but unfortunately it is not so.

The Sundarapandian pair of Sasikumar and Lakhsmi Menon had set up some kind of expectation based on their previous track record. However, but for giving the audience quite a few déjà vu moments of the earlier film, the pair does not render much here.

The story of Kuttipuli is very simple. It is about a mother who does not want her son to follow her husband’s footsteps but desires his settlement in matrimony like every normal man.

It is harmless if there is no storyline but it could get really destructive when there is a shortfall in treatment and presentation. Most of the time, Kuttipuli lacks any direction and drifts aimlessly. Inept screenplay, archaic storyline, pointless scenes and inconsistent characterization mark Kuttipuli. At no point in the film the director has a grip of his audience. The scenes involving Pappu and gang evoke some kind of laughs while not contributing anything to the progress of the film. There are so many foibles in the film and listing them would be pointless.

Although Sasikumar is sincere in his efforts- he even does a neat jig of Silambattam- his characterization has nothing new to offer. His character of Kuttipuli is the personification of all things Madurai. He is someone who goes livid if something happens to women from his locality; does not raise his sight towards any woman; extremely respectful of his mom; fights ferociously and even tries to emulate a suave hero. The scene where Saranya and Ramaprabha deride Shah Rukh Khan as an emaciated soul is quite amusing.

For Saranya, the role of a sacrificing mother is something that she can do in her sleep. Lakshmi Menon’s role is exactly like the one she did in Sundarapandian from her costumes to emotions to body language. Aadukalam Murugadoss in his supporting role as a friend of Sasikumar delivers his bit.

The excessive usage of old songs especially Ilayaraja’s ‘Ponnoviam Kandenamma’ appears more like a mockery than a tribute. And there are many such songs used which are annoying to say the least.

The tracks of Ghibran had created the desired effect when they were released. But the picturization has not enhanced its feel. Rest of the technical departments is just about average.

The film travels on an excessive manipulative melodrama most of the time. And if you are the type who would go gaga over mother sentiment, mindless violence, punch dialogues, Kuttipuli may work for you.
Verdict: Strictly for those who favor ‘amma’ sentiment and rural violence
rating
thanks to behindwoods.com