Saturday, November 28, 2015

சித்தார்த்தின் ட்வீட்டர் பதிவிற்கு சமந்தா பதில் ???

சித்தார்த் மற்றும் சமந்தா இடையிலான காதல் சில காலம் தமிழ் சினிமாவின் சூடான டாப்பிக்காக இருந்து வந்தது. ஆனால் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக இருவரும் அவர்களுக்குள்ளான உறவை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் சித்தார்த் அண்மையில் ட்விட்டரில் மேற்கொண்ட பதிவிற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.



தனது ஜில் ஜங் ஜக் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சித்தார்த் அண்மையில் தனது ட்விட்டர் தளத்தில் தனது வாழ்வில் நடந்த மோசமான விடயம் உண்மையில் தனக்கு நடந்த சிறப்பான விடயம் என்பதை உணர்ந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.




இதற்க்கு பதிலடியாக சமந்தா தனது ட்விட்டர் வலைத்தளத்தில் "நீ வெறும் எனக்கு தெரிந்த நபர்களில் ஒருவன் மட்டுமே என்பதை நானும் உணர்கிறேன்" என்ற வகையில் பதிவிட்டிருக்கிறார். 

மேலும் அந்த பதிவை சொற்ப நேரத்திலேயே சமந்தா delete செய்து விட்டதாகவும் தெரிகிறது. ஆனாலும் அவரது பாலோவர்ஸ் அதனை மீள் பதிவிட்டு வருகிறார்கள்.

(டைம் பாஸ் போஸ்ட்)

Wednesday, March 26, 2014

தனியாக வீட்டில் இருந்தவாறு பார்ட் டைம் ஜாப் தேடும் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!

தனியாக வீட்டில் இருந்தவாறு பார்ட் டைம் ஜாப் தேடும் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!
கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்...
உங்கள் வருமனத்திற்கான வழிகாட்டல்களை அவர்களே தருவார்கள்.
டோன்ட் மிஸ் இட் !
~


Please try out the below link and start your part time earnings immediately....
OMG!!! my balance is moving up minute to minute !!!


http://Youthweeklypay.com/?invite=40725

Monday, March 24, 2014

R.I.P to all the victims of #MH370



R.I.P to all the victims of #MH370


கடந்த சில நாட்களாக முழு உலகத்தினதும் பிரதான செய்தியாக விளங்கிய MH 370 விமானத்தின் மர்மம் இன்றுடன் முடிவுக்கு வந்ததது.
தெற்கு இந்து சமுத்திரத்தில் கிடைக்கப் பெற்ற விமான பாகங்கள் MH370 உடையது தான் என்று எந்த ஒரு சந்தேகத்திற்கும் அப்பால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.

உலக மக்கள் அனைவரினதும் பொதுவான பிரார்த்தனை வெறும் கனவாகி போய் இருப்பது அனைவரையும் ஆழ்ந்த துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இறுதியாக MH370 யில் பயணித்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

Saturday, January 18, 2014

நடுவர்களை அசர வைத்த பூச்சிப் பெண் !

நான் ரசித்த வீடியோ - Americans got talent!




ஒஸகர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப்படங்களில்லை!


oscar_002ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை. சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தெரிவாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
86வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார் அகாடமியின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் அறிவித்தனர்.
இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு சினிமா படமோ அல்லது நடிகர், நடிகைகளின் பெயரோ இடம் பெறவில்லை. சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் கூட இந்தியப் படமோ, இந்தியாவில் தயாரான வேறு எந்தப் படமோ இடம்பெறவில்லை.

- நன்றி தமிழ் லீடர் 

Friday, January 17, 2014

விகடன் சினிமா விமர்சனம் - வீரம்

சினிமா விமர்சனம் - வீரம்



காதல்கைகூடக் கீழே போட்ட அரிவாளை, காதலைக் காப்பாற்ற  மீண்டும் கையில் எடுக் கும்... 'வீரம்’!
ஜில் காதல், ஜாலி கேலி, அதிரடி ஆக்ஷன், சென்ட்டிமென்ட் உருக்கம்... என அஜித்துக்கு ஏற்ற மாஸ் மசாலா பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்திருக்கிறார் இயக்குநர் சிவா. 'முரட்டுக்காளை’ ஒன்லைன், 'பையா’ ட்விஸ்ட், அரிவாள், ரத்தம், சத்தம்... எனப் பார்த்துப் பழகிய சங்கதிகள்தான் என்றாலும், காமெடி கோட்டிங் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
'ஒட்டன்சத்திரம் விநாயகமாக’ அடி முதல் முடி வரை ஆல் வெள்ளையாக வருகிறார் அஜித். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கோட், சூட், துப்பாக்கி இல்லாமல் உருக உருகக் காதலிக்கும் அஜித்தைப் பார்க்க... அழகாக இருக்கிறது! ஆக்ஷன் காட்சிகளில் முறைப்பு, காதல் காட்சிகள் தவிப்பு எனப் படம் நெடுக ஹேட்ஸ் ஆஃப்!
ரீ-என்ட்ரியில், தமன்னா இன்னும் அழகு! அரிவாளைப் பார்த்து மயங்கி விழுவது, வீட்டுக்கு வரும் அஜித்தைப் பார்த்துப் பரிதவிப்பது என நடிக்கவும் செய்திருக்கிறார்.  அஜித்தின் தம்பிகளாக வரும் பாலா, விதார்த், சுஹைல், முனீஷ§க்கு 'கும்பல் கோவிந்தா’ வேலைதான் என்றாலும், ஓ.கே. பாய்ஸ்!
முன்-பின்பாதிகளில் காமெடி மேளா நடத்தி படத்தின் நீளத்தை மறக்கச் செய்கிறது சந்தானத்தின் காமெடி. 'வேணாம்னு சொல்றதுக்கே இவ்ளோ வேகமாப் போறாரே...’, 'தள்ளி ஸ்டார்ட் ஆகும்னு பார்த்தா, தானாவே ஸ்டார்ட் ஆகுதே?’ என்று கிடைக்கும் கேப்பில் கெடா வெட்டுகிறார் சந்தானம். அதிலும் சந்தானமும், அஜித்தின் தம்பிகளும் 'படம் எடுக்கிறோம்’ என்று தம்பி ராமைய்யாவைப் படுத்தும்பாடு... ரகளை மாஸ்! திருவிழா கணக்காக வரும் கூட்டத்தில் நாசர், அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, பிரதீப் ராவத் ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.
திருப்பாச்சி அரிவாளுக்கே தடை விதித்துவிட்டார்கள் தமிழகத்தில். ஆனால், படத்தில் விதவிதமாக, ரகம்ரகமாக அரிவாள்கள் ஆட்களைப் பலிவாங்கிக்கொண்டே இருக்கிறதே! எம்பூட்டு ரத்தம்?
அட, போலீஸ்... போலீஸ்... என ஒரு கேரக்டர் இருப்பதையே மறந்துவிட்டார்கள் போல. அதுல் குல்கர்னியின் அந்த ஃப்ளாஷ்பேக்... செம டிராமா!
பின்னணி இசையில் டெம்போ ஏற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் அம்போ என விட்டுவிடுகிறார். வெற்றியின் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதனின் எடிட் கட்டும் படத்துக்குப் பெரும்பலம்.
மாஸ் மசாலாதான்... ஆனாலும் டேஸ்ட் பீஸ்!
- விகடன் விமர்சனக் குழு

விகடன் சினிமா விமர்சனம் - ஜில்லா

சினிமா விமர்சனம் - ஜில்லா



ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்தினால்... அதுவே ஜில்லா!  
மோகன்லால் - விஜய் என மாஸ் ஆக்ஷன் மசாலா ட்ரீட் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நேசன். மோகன்லாலைக் கொல்ல நடக்கும் முயற்சிகளைச் சொல்லிவிட்டு, பின்பாதியில் அத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோக்கும் இடத்தில் மட்டும் சுவாரஸ்யம். மற்றபடி பன்ச், பில்டப் என்று மசாலாவைக் 'காட்டு காட்டென்று’ காட்டியதில் கண்ணைக் கட்டுகிறது!
கம்பீர ரௌடி சிவனாக மோகன்லால்... அசத்தல்! நரை தாடி, அகல பாடி எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஆனால், 'இந்தச் சிவனை...’, 'இந்தச் சிவனுக்கு...’ என ஆரம்பித்து மதுரையில் உட்கார்ந்துகொண்டு அவர் அடிக்கும் பன்ச்களில்... மலையாள வாடை தூக்கல்!
ஆக்ஷன் கதைக்கு விஜய்யின் எக்ஸ்பிரஷன் களும், பாடிலாங்குவேஜும் பக்கா. தீ விபத்தில் பலியான குழந்தைகளைப்  பார்த்துக் கலங்குவதும், அப்பா பாசத்தில் உருகுவதுமாக செம. ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடக்கும் ஸ்டைல்... வேணாம் ப்ரோ!  
லேடி போலீஸ் காஜல் அகர்வால். கண்களைச் சுருக்கிக் கோபப்படுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. சம்பத் கோபம், நக்கல், நையாண்டி, வெறி... என எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறார்.  செம சீரியஸ் கதையில் கொஞ்சம் சிரிப்பு மாவு பிசைவது 'பரோட்டா’ சூரிதான். ''என்னாது 'சாந்தி’ங்கிறது மாடர்ன் பேரா..? காந்தி காலத்திலேயே தடை பண்ணின பேருடா அது...'' என்று விஜய் காதலுக்கு லந்து கொடுக்கும் இடங்களில் கிச்சுக்கிச்சு!
மிரட்டல் அப்பா - அவரது ப்ளஸ் மைனஸ் எல்லாம் அறிந்த செம ஷார்ப் மகன்... இவர்களுக்கு இடையிலான மோதல் தூள் கிளப்ப வேண்டாமா? ஆனால், ஏதோ செல்லச் சண்டை போட்டுக்கொள்வது போல, 'திருந்து - திருந்த முடியாது’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜாலி கேலி முன்பாதி ரசிக்கவைத்தாலும் இரண்டாம் பாதியில் அவ்வளவு நீள ஃப்ளாஷ்பேக்குகள்... சலிப்பு. 'நாம ரௌடியா இருக்கோம்...போலீஸாவும் இருந்தா என்ன?’ என்ற எண்ணமும், திருந்திய விஜய்க்கு சீனியர் பதவி உயர்வு வழங்கும் இடமும்... ப்பா£.!
இமான் இசையில் 'கண்டாங்கி...’, 'மாமா எப்போ ட்ரீட்டு?’ பாடல்கள் ரண்டக்க ரண்டக்க ரகம். ஆக்ஷன் படத்துக்கான ஃபுல் டெம்போவையும் கடத்துகிறது கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு.
ரொம்ப நேரம் ஜில்லாவைச் சுற்றிக் காட்டிக்கொண்டே இருந்தால்,  கண்ணு வேர்க்காதா பாஸ்?
- விகடன் விமர்சனக்குழு

Thursday, September 5, 2013

விகடன் திரை மதிப்பெண் - Vikatan Cine Ratings


திரை விமர்சனம் எழுதுவதிலும் அதற்கு மதிப்பெண் வழங்குவதிலும் ஆனந்த விகடன் பாணி அலாதியானது.

ஆனந்த விகடன் விமர்சனங்களே சில வேளைகளில் பதிவர்கள் இடையே விமர்சனதிற்கு உள்ளாகின்றன. பக்கசார்பு, உச்ச நட்சத்திரங்களுக்கு ஜால்ரா என்றெல்லாம் பலர் பலவாறு கூறினாலும் அவர்களின் தனித்துவம் அவர்களின் மதிப்பெண் முடிவுகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது.




அந்த வகையில் அவர்கள் சமீபத்தில் வந்த சில படங்களுக்கு வழங்கிய புள்ளிகளை இங்கே பட்டியலிடுகின்றேன். உங்கள் விருப்ப படங்களை மாற்றைய படங்களோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்,

* ஆதலால் காதல் செய்வீர் - 


* ஐந்து ஐந்து ஐந்து (555) - 


* தலைவா - 


* பட்டத்து யானை - 



* மரியான் - 

* சிங்கம் 2 - 

* தில்லுமுல்லு  - 


* தீயா வேலை செய்யணும் குமாரு - 

* குட்டிப்புலி  - 

* நேரம் - 

* சூது கவ்வும் - 


* எதிர் நீச்சல் - 


* மூன்று பேர் மூன்று காதல் - 


* உதயம் NH4 - 

* சேட்டை - 

* கேடி பில்லா கில்லாடி ரங்கா - 

* சென்னையில் ஒரு நாள் - 

* சுண்டாட்டம் - 


* பரதேசி - 


* ஹரிதாஸ் - 


* ஆதி-பகவான் - 

* விஸ்வரூபம் - 


* கடல் - 

* சமர் - 

* கண்ணா லட்டு திண்ண ஆசையா - 

* அலெக்ஸ் பாண்டியன் - 

* நீதானே என் பொன் வசந்தம் -  

* கும்கி - 

* நீர்ப்பறவை - 

* நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - 

* துப்பாக்கி - 

* போடா போடி - 

* ஆரோகணம் - 

* பிட்சா - 

* சுந்தர பாண்டியன் - 

* சாட்டை - 

*  மாற்றான் - 

* தாண்டவம் - 






Tuesday, September 3, 2013

ஆதலால் காதல் செய்வீர் - விகடன் விமர்சனம்

'ஆதலால் காதல் (மட்டும்) செய்வீர்’ படம்!
க்ளாஸ்மேட்  சந்தோஷ் ரமேஷ் (அறிமுகம்) - மனீஷாவுக்கு காதல். சின்னச் சின்ன சில்மிஷங்கள் 'ஓவர் தனிமை’ அளவுக்கு எல்லை மீற, கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றோருக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். ஆனால், விஷயம் தெரிந்துவிடுகிறது. காதலர்கள் ஒன்றுசேர நினைக்க,  'கருவைக் கலைக்க வேண்டும்’ என்பதை சந்தோஷின் பெற்றோர் நிபந்தனையாக வைக்கிறார்கள். 'குழந்தைதான் ஒரே ஆதாரம்’ என மனீஷா மறுக்க, வயிற்றுப் பிள்ளையை வைத்து நடத்தப்படும் நாடக சென்ட்டிமென்ட் டால் காதலும் கருவும் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!
நீண்டகாலத் தயாரிப்பாக இருந்தாலும், 'நாடகக் காதல்’ என்ற பதம் தமிழகத்தில் பரபரக்கும் சூழலில்  வெளியாகியிருப்பதால் 'டாபிக்கல் டச்’ சினிமாவாகிவிட்டது.  
'நான் ஹஸ்பண்ட்னு சொன்னா நம்ப மாட்டாங்க...’ என்று தன் காதலியின் கருவைக் கலைக்க நண்பனைக் கணவனாக நடிக்க வைக்குமிடம்... பெரியவர்களுக்கான பகீர். ஒரு கணம் உலுக்கியெடுக்கும் அந்த க்ளைமாக்ஸ் பாடல்... இளைஞர்களுக்கான திகீர். இந்த இரண்டும் ஓ.கே. ஆனால், மற்றபடி எந்தத் திருப்பமுமற்ற திரைக்கதை அலுப்பு!
நட்சத்திரப் பட்டாளம் இல்லாத மொத்தப் படத்தையும் ஒற்றைத் தூணாகத் தாங்கி நிற்பது மனீஷாவின் விழி, இதழ்களும் உடல் மொழிகளும் மட்டுமே! வீட்டில் காதலை மறைக்க மனீஷா செய்யும் சேட்டைகளும் குறும்புகளும்... ச்சோ ஸ்வீட்!  'உன்  பொண்ணு படுத்ததுக்கு எவ்ளோ காசு வேணுமோ, அதை வாங்கிட்டுப் போ’  என்று பஞ்சாயத்துக்களில் தெறித்து விழும் வார்த்தைகளின்போது, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் விம்மி அழும் காட்சியில் பதற வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். 'நீங்க மாமா ஆகிட்டீங்க’ என்று சந்தோஷை வாழ்த்தும்போது, 'நீங்க வேற... சீக்கிரமே அவன் அப்பாவே ஆகப் போறான்’ என்று கலாய்க்கும் இடங்களில் சிரிக்க வைக்கிறார் அர்ஜுன். இந்தக் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்ட அளவுக்கு, சந்தோஷின் பாத்திரத்தை வலுவாக்கவில்லையே டைரக்டர் சார். சைக்கிள் கேப்பில் பெல் அடிக்கும் ஸ்கோப்கூட இல்லாமல் திண்டாடுகிறார் சந்தோஷ்.  
'லவ்வர்ஸை அப்படியே விட்ரணும்... அவங்களா சண்டைபோட்டுப் பிரிஞ்சுடுவாங்க. நாம பிரிக்க நினைச்சாதான், அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிரும்’, 'உங்க பொண்ணு செத்துட்டானு நினைச்சு வந்து சேருங்க’... சூழ்நிலைக்கேற்ற சுசீந்திரன் - கிளைட்டனின் நச் நச் வசனங்கள் படத்தின் பலம்! பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் ஏன் இத்தனை ஆவரேஜ் ஸ்கோர் யுவன்? முன்பாதியில் கேம்பஸ் உற்சாக வண்ணங்கள் பொழியும் ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, க்ளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் சேர்க்கிறது. ஆனால், காட்சிகளின் வீரியத்துக்காக அந்தப் பச்சைக் குழந்தையை படாதபாடு படுத்தியிருப்பது... பயங்கரம்!  
   'இளைய தலைமுறை இப்படி இருக்கிறதே’ என்ற இயக்குநரின் ஆதங்க அக்கறையை, அலட்சியமான சம்பவங்கள் அழுத்தமில்லாமல் வீரியமிழக்க வைத்துவிட்டது!      
- விகடன் விமர்சனக் குழு

Thursday, August 29, 2013

குட்டி கதை - பட்டினத்து லிப்ட்

ஹாய் பிரெண்ட்ஸ் !
ரொம்ப நாள் அப்புறம்... உங்களுக்காக ஒரு குட்டி கதை வச்சிருக்கேன்...
வாசிங்க என்ஜாய் பண்ணுங்க!


ஒரு கிராமத்து ஏழை பையனும் அவனோட குடும்பமும் பட்டினம் வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங் மால் கு போனாங்களாம்.

அங்கே அந்த பையன் ஒரு அபூர்வமான விஷயத்த கண்டானாம். உடனே அவன் அப்பா கிட்ட வந்து, "அப்பா அதோ அந்த சுவர் தானாகவே ரெண்டா பிரிஞ்சி தானா முடிகிறது" னு காட்டினானாம்.

முன்ன பின்ன லிப்ட்ட கண்டிராத அப்பனும், "நானும் இப்போ தான் இப்டி ஒன்ன பார்க்குறேன் மகனே" னு வாய பிழந்து பார்த்துகிட்டு இருந்தானாம்.

அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்டி பட்டன தட்டி லிப்ட திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிகிச்சாம். ஆனா இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குது னு பார்த்துகிட்டே இருந்தங்களாம்.

பக்கத்துல இருந்த போர்ட்ல நம்பர் ஒன்னு ஒன்னா கூடிகிட்டே போச்சாம் 1....2.....3.....4.....5......6.... அப்புறம் திரும்ப ஒன்னு ஒன்னா குறைஞ்சி 1 கே  வந்ததும் கதவு திறந்துதாம்.

உள்ள இருந்து ஒரு 24 வயது பெண் - மாடல் அழகி மாதிரி வெளில வந்தாளாம்.

உடனே அந்த அப்பன் பையன் கிட்ட சொன்னானாம் "டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!"




Sunday, June 9, 2013

பிரபலங்கள் பேட்டி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன்! - விஜய் சேதுபதி




'பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' "சூது கவ்வும்' படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு மிகவும் பிசியாகி விட்டார் விஜய் சேதுபதி. 

"ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்', "சங்கு
தேவன்'......என்று இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் நட்சத்திர நடிகர்களின் படங்களே வெற்றி பெற திணறும்போது, நீங்கள் நடித்த படங்கள் தொடர் வெற்றி பெற்று வருகின்றனவே...?
என்னைப் பார்க்கும் எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்வி இதுதான். இந்த வெற்றிக்கு நான் மட்டும் சொந்தக்காரன் என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். என்னை திறம்பட நடிக்க வைக்க முடியுமென்று நம்பிய இயக்குநர்கள்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணமாகவும் முக்கிய சூத்திரதாரியாகவும் இருக்கிறார்கள். "தென்மேற்குப் பருவகாற்று' படத்திலேயே நான் பரவலாக கவனிக்கப்பட்டேன். ஆயினும் இரண்டு வருடங்கள் எனக்கு படமே இல்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படப்பிடிப்பிற்கு அவ்வப்போது போய் விட்டு வருவேன். ஆரம்பத்தில் அந்தப் படத்தின்மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் நடிக்கவே ஆரம்பித்தேன். ஆனால் போகப் போக ஈடுபாடு ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. வாய்ப்பே இல்லாமல் இருந்தபோது, வந்த நிதானம்தான் அடுத்தடுத்த பயணங்களுக்கான திட்டமிடலைத் தந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ஒவ்வொரு படத்திலும் செய்து முடித்து விட்டால் எந்த ஒரு நடிகராலும் வெற்றிகளைத் தொடர்ந்து கொடுக்க முடியும். இதுவரை வெற்ற வெற்றிகள் பெரிய விஷயமல்ல. இதைப் போலவே இனி வரும் படங்களும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதால் இன்னும் கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்.



தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் பெரிய பேனர், புகழ் பெற்ற இயக்குநர் என்று முயற்சிக்காமல் இன்னமும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருக்கின்றீர்கள் போலிருக்கிறதே?

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவில் இருக்கும் அறிமுக இயக்குநர்கள்தான் நிறைய புதுப்புது விஷயங்களை வைத்திருப்பார்கள். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறிதான் அவர்களை அப்படி புதிது புதிதாக சிந்திக்க வைக்கும். இப்படிச் சொல்வதால் நான் முன்னணி இயக்குநர்களை குறை கூறுவதாகவோ அவர்களது திறமையை குறைத்து மதிப்பிடுவதாகவோ பொருள் அல்ல. யாராக இருந்தாலும் நான் கதை கேட்காமல் நடிக்க மாட்டேன். என்னுடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம், கதைதான். இயக்குநர் யாராக இருந்தாலும், கதை அழுத்தமாக இருக்க வேண்டும். நல்ல கதை இருந்தால் மட்டுமே அதை இயக்குநர் சிறப்பாக திரையில் வடிக்க முடியும். சட்டியிலேயே இல்லையென்றால் எங்கிருந்து அகப்பையில் வரும்? என் படங்களுக்கு பெரிய வியாபாரம் கிடையாது. முதல் நாள் ஓப்பனிங்கும் இருக்காது. ஆனால் இதையெல்லாம் தாண்டி நான் நடிக்கும் சினிமா ஜெயிக்கும். பெரிய பேனரா புகழ் பெற்ற இயக்குநரா என்று பார்த்து நான் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. படத்தின் கதை என்னை சலனப்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம்.



நீங்கள் நடித்து வெளிவந்த படங்களாகட்டும் அல்லது இப்போது நடித்து வரும் படங்களாகட்டும் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கின்றனவே?

நான் நடித்து வெளியான படங்களின் எப்படி வித்தியாசமாக இருந்ததோ அதைப் போலவே இப்போது நடித்து வரும் படங்களும் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்தக் கதைகள் எல்லாம் மாறுபட்ட களன்களைக் கொண்டிருந்தாலும், எனக்கு பிடித்த கதை "ரம்மி'. சுமார் இருபது வருடங்களாக சினிமா துறையில் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் இயக்குகிறார். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடலின் வரிகள்தான் கதை. நாம ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைத்தால், வாழ்க்கை நம்மை வேறு ஒரு இடத்துக்கு இழுத்துச் செல்லும். கால வெள்ளத்தில் அடித்துச் செல்கிறபோது நடக்கிற சம்பவங்கள்தான் "ரம்மி'. என்னுடன் இனிகோ பிரபாகர், சூரி இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கும். பண்ணையாருக்கும் பத்மினி என்ற காருக்கும் இருக்கிற உறவுதான் "பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் கதை. இதில் எனக்கு கார் டிரைவர் கேரக்டர்.



"சங்கு தேவன்' படம் மூலமா தயாரிப்பாளராகவும் களம் இறங்கி விட்டீர்களே...?

நான் என்னுடைய சொந்தப் படத்தைப் போட்டு இந்தப் படத்தைத் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜேஎஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்காக தயாரிக்க இருக்கிறேன். அப்படத்தில் எனக்கு டிப்பர் லாரி டிரைவர் வேடம். படத்தயாரிப்பில் இருக்கும் நுணுக்கங்களை "சங்குதேவன்' கற்றுத் தரும் என நம்புகிறேன்.



வளர்ந்து வரும் நடிகர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்?

எனக்கு சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும். காரணம் அவருடைய டைமிங் சென்ஸ். அவரைப் பார்க்கும் போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
சமகாலத்தில் இப்படி ஒரு திறமையன நபர் இருப்பது நல்லதுதான். அப்போதுதானே ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். "அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. உண்மையாகவே அவருக்கு ஆர்வம் அதிகம். இவர்கள் நடித்த படங்களை சமீபத்தில்தான் பார்த்தேன். இன்னும் நிறைய பேரையும் பிடிக்கும்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸ்ல அஜித், விஜய், விக்ரம், சூர்யா மாதிரி சிலர்தான் இருக்காங்க. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதின்னு அடுத்த ரேஸு க்கு சில பேர் வந்துட்டீங்க.. உங்கள் இலக்கு என்ன...?

யாராக இருந்தாலும் ஹிட் முதலிடம் தரும். ஆனால், திறமைதான் நம் காலத்துக்குப் பிறகும் நிற்கும். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை விட, என் கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எப்போதும் என் மனதில் நிற்கும். இப்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். எனக்கென்று எந்த ஹிஸ்ட்ரியும் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். ஹீரோவாகி விட்டேன். இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டின்னா எனக்கு நானேதான். எனக்கு எந்த ரேஸிலும் சேர்வது பிடிக்காது. சேர்ந்ததும் கிடையாது.