Sunday, May 26, 2013

பசு கொலையை தடுக்க கோரி இலங்கை பிக்கு தீக்குளிப்பு

இலங்கை தலதா மாளிகையின் முன்னால் பிக்கு ஒருவர் தீக்குளித்து மரணமான சம்பவம் தலைநகர் கொழும்பில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. 

பசுக்களை கொள்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நேற்று வண. போவத்த இந்திரட்ன தேரர்  தீக்குளித்து மரணமானார். முஸ்லிம்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிரான இலங்கை பிக்குகளின் நிலைப்பாட்டை இந்த செயல் நன்று பிரதி பலிப்பதாக உள்ளது.

சாந்தி, அமைதி, தியானம் என்ற கொள்கைகளை கொண்ட பௌத்த மதத்தின் போதகர் தனக்கு தானே தீயிட்டு மாண்டிருப்பது, அதுவும் புத்த பெருமான் ஜனன தினமான நேற்று இச்சம்பவம் நடந்திருப்பது உண்மையில் இலங்கை சாதுக்கள் (சிங்களத்தில் பிக்குவை சாது என்பர்), சாதுக்கள் இல்லை என்பதையே எடுத்து காட்டுகிறது.

பசு வதைக்கு எதிராக தீக்குளிக்க துணியும் துறவிகள் தமிழர் வதைகளுக்கு உட்பட்ட நேரம் தாய் நட்டு பெருமை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தமை குறிப்பிட தக்கது.


1 comment:

  1. ivlo kaalam pasuva konnapa theriyalama puthi varalayama en pudhusa

    ReplyDelete